Last Updated : 02 Oct, 2021 11:42 AM

 

Published : 02 Oct 2021 11:42 AM
Last Updated : 02 Oct 2021 11:42 AM

இந்தியாவில் குறையும் கரோனா தொற்று: 197 நாட்களில் இல்லாத அளவு சிகிச்சையில் இருப்போர் குறைவு

கோப்புப்படம்

புதுடெல்லி


இந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது,கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 24 ஆயிரத்து 354 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 37 லட்சத்து 91 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 73ஆயிரத்து 889 ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் வீதம் 0.81 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 197 நாட்களில் இல்லாத அளவு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கைக் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1,335 பேர் குறைந்துள்ளனர்.

கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 30 லட்சத்து 68 ஆயிரத்து 599 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.86ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப்பின் கரோனா சிகி்ச்சையில் இருப்போர் எண்ணிக்கை இந்த அளவுக்கு குறைந்தது இதுதான் முதல்முறையாகும். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 234 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 48 ஆயிரத்து 573ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை ஏறக்குறைய 57.19 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, இதில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 14 லட்சத்து 29 ஆயிரத்து 258 பேருக்கு பரிசோதனை செய்யப்ப்டது. 89.74 கோடி பேருக்கும் அதிகமாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x