

திருமலையில் பஜனைகள் நடத்த அறங்காவலர் குழுவினரும் அதிகாரிகளும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி குண்டூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன் பஜனை குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருமலையில் அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு இடங்களில் பஜனை குழுவினர் ஏழுமலையானை புகழ்ந்து ஆடிப் பாடுவதுவழக்கமாக இருந்தது. இந்நிலையில் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளாக திருமலையில் பஜனைகள் நடத்த தேவஸ்தான அறங்காவலர் குழு அனுமதிக்கவில்லை.
இதனால் பஜனை குழுவினர் தங்கள் கலை மற்றும் கலாச்சாரம் பாதிக்கப்படுவதாகவும் தங்களை இந்த அரசு ஒதுக்கி வைப்பதாகவும் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் குண்டூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அகில பாரத பஜனை கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.