Published : 01 Oct 2021 03:18 AM
Last Updated : 01 Oct 2021 03:18 AM

கொள்கை மீது தொண்டர்கள் விசுவாசம் : பாஜக.வினருக்கு ஜே.பி. நட்டா பாராட்டு

உத்தராகண்டில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அங்கு தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. உத்தராகண்டை பொறுத்தவரை ஆளும் பாஜகவுக்கும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், உத்தராகண்டில் பாஜக தொண்டர்களுடன் தேசியக் கட்சி தலைவர் ஜே.பி. நட்டா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

உத்தராகண்டில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர். தற்போது பாஜக தலைமையில் உத்தராகண்ட் வளர்ச்சிப் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகளால் இதனை சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் அவை ஈடுபட்டு வருகின்றன. அதேபோல, மக்களை ஏமாற்றுவதற்காக பொய்யான வாக்குறுதிகளையும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இவர்களின் கபட நாடகத்தை மக்களிடம் பாஜகவினர் எடுத்துக் கூற வேண்டும்.

இந்த தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறப் போவது உறுதி. ஆனால், இந்த வெற்றியை பெற பாஜகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு ஜே.பி. நட்டா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x