Published : 30 Sep 2021 07:44 AM
Last Updated : 30 Sep 2021 07:44 AM

கட்சியில் இருந்து தலைவர்கள் விலகல்: காங்கிரஸுக்கு கபில் சிபல் சரமாரி கேள்வி

புதுடெல்லி

கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறி பாஜக உள்ளிட்ட வேறு கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் நேற்று கூறியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பவரே இல்லை. முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. ஆம், ஐயா என்று கூறி கீழ்படிந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல. நாங்கள் ஜி-23 குழுவை சேர்ந்தவர்கள். பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்போம். பாரம்பரியம்மிக்க காங்கிரஸ் கட்சியிலிருந்து தலைவர்கள் ஏன் வெளியேறி வருகின்றனர்?

ஒருவேளை அது நம்முடைய தவறா என்று நாம் ஆராய வேண்டும். உடனடியாக காங்கிரஸ் காரியக்கமிட்டி (சிடபிள்யூசி) கூட்டத்தைக் கூட்ட வேண்டும். தலைவர்களிடையே குறைந்தபட்சம் ஒரு உரையாடல் நடைபெற வேண்டும். நாங்கள் கட்சியின் சித்தாந்தத்தை விட்டுவிட்டு வேறு எங்கும் செல்ல மாட்டோம். காங்கிரஸின் முரண்பாடு என்னவென்றால், தலைமைக்கு நெருக்கமானவர்கள் கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். ஆனால், தலைமையிடம் நெருக்கமாக இல்லாதவர்களாக கருதப்படுபவர்கள் கட்சியில் இன்னும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x