Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலை நிர்வகிப்பது தொடர்பான வழக்கில் கோயிலை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கு உள்ளது என்றும் அரச குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளையின் கடந்த 25 ஆண்டுகால கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. இதை எதிர்த்தும் கணக்கு தணிக்கையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு கடந்த வாரம் நீதிபதி யூ.யூ. லலித் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது கரோனா பாதிப்பால் கோயில் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாகவும் அறக்கட்டளையில் இருந்து பணம் வழங்க வேண்டும் என்றும் அறக்கட்டளை கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என்றும் கோயில் நிர்வாகக் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அறக்கட்டளை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கில், ‘‘ பத்மநாபசுவாமி கோவிலின், கடந்த 25 ஆண்டு கால கணக்குகளை 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அறக்கட்டளையின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT