Last Updated : 05 Feb, 2016 12:35 PM

 

Published : 05 Feb 2016 12:35 PM
Last Updated : 05 Feb 2016 12:35 PM

ஐ.எஸ். உடன் தொடர்பு: டெல்லியில் சந்தேக நபர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மும்பையைச் சேர்ந்த மோஷின் என்ற நபர் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் உத்தராகண்டில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். உத்தராகண்டின் ஹரித்வார் நகரில் நடந்த அர்த் கும்ப மேளாவை சீர்குலைக்க அவர்கள் நால்வரும் சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில்தான் தற்போது டெல்லியில் மோஷின் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோஷின் பண உதவி செய்ததாக அந்த நான்கு இளைஞர்களும் வாக்குமூலம் அளித்தனர். மோஷினிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x