Last Updated : 20 Sep, 2021 12:22 PM

 

Published : 20 Sep 2021 12:22 PM
Last Updated : 20 Sep 2021 12:22 PM

கடந்த 2020 மார்ச்சுக்குப் பின் கரோனா சிகிச்சையில் இருப்போர் சதவீதம் மிகக் குறைவு

கோப்புப்படம்

புதுடெல்லி

இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 30 ஆயிரத்து 256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 18 ஆயிரத்து 181 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 977 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் வீதம் 0.95 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 27 லட்சத்து 15 ஆயிரத்து 105 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.72 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 295 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 45 ஆயிரத்து 133 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 152 பேரும், மகாராஷ்டிராவில் 49 பேரும் உயிரிழந்தனர்.

நாட்டில் இதுவரை 55 கோடியே 36 லட்சத்து 21 ஆயிரத்து 766 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 லட்சத்து 77 ஆயிரத்து 607மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 80.85 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x