Published : 17 Sep 2021 11:25 AM
Last Updated : 17 Sep 2021 11:25 AM

மீண்டும் உயரும் கரோனா தொற்று: ஒரே நாளில் 34,403 பேருக்கு தொற்று உறுதி

புதுடெல்லி

நாடு முழுவதும் அன்றாட கரோனா தொற்று தொடர்ந்து கடந்த சில நாட்களாக குறைந்து வந்தநிலையில் இன்று இரண்டாவது நாளாக 30 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,403 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 34,403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த பாதிப்பு 3,33,81,728 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவில் இருந்து 3,25,98,424 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தி்ல் 37,950 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,39,056 பேர்ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 320 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,44,248 என்றளவில் உள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை 77,24,25,744 உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 63,97,972 ஆக உள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x