Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 21-வது கூட்டம்தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் அந்நாட்டு அதிபர்இமோமலி ரஹ்மோன் தலைமையில் நாளை நடக்கிறது.
இந்த மாநாட்டில் இந்தியக் குழுவுக்கு தலைமை தாங்கி, நாளை நடக்கும் முக்கிய கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் பேசுகிறார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியாவின் பிரதிநிதியாக மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
அப்போது, ஈரான், தஜிகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலைகள் குறித்தும் அதன் பாதிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா 4-வது முறையாக இம்மாநாட்டில் பங்கேற்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT