தினசரி கரோனா தொற்று 25,404 ஆக குறைந்தது: தடுப்பூசி எண்ணிக்கை  75.22 கோடியாக உயர்வு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

நாடுமுழுவதும் அன்றாட கரோனா தொற்று எண்ணிக்கை 25,404 ஆக குறைந்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 75.22 கோடியாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 25,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த பாதிப்பு 3,32,89,579 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவில் இருந்து 3,24,84,159 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தி்ல் 37,127 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,62,207 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 339 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,43,213 என்றளவில் உள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை 75,22,38,324 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 78,66,950 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in