Last Updated : 01 Feb, 2016 09:38 AM

 

Published : 01 Feb 2016 09:38 AM
Last Updated : 01 Feb 2016 09:38 AM

கேரளாவில் பெண்களுக்கான ‘ஷி டாக்ஸி’யை அடுத்து திருநங்கைகளுக்காக ‘ஜி டாக்ஸி’ அறிமுகம்

சமூகத்தில் திருநங்கைகள் சந்திக் கும் பிரச்சினைகள் ஏராளம். வீட்டி லும் அவர்களுக்கு ஆதரவு இல்லா மல், வெளியிலும் அவர்கள் பல அவமானங்களை சந்திக்க வேண்டி உள்ளது. அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் நட வடிக்கைகளை எடுத்து வருகிறது.

திருநங்கைகளில் சிலர் அரசியலி லும், அரசு அலுவலகங்களிலும் பணி யாற்றி வருகின்றனர். எனினும், அவர்களில் பெரும்பாலானோர் பரிதாபமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநில அரசு திருநங்கைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த புதிய திட்டம் ஒன்றை அறிமுகப் படுத்த உள்ளது.

ஏற்கெனவே, பெண்களுக்காக ‘ஷி டாக்ஸி’ சேவையை கேரள அரசு அறிமுகப்படுத்தியது. அதே போல் இப்போது ‘ஜி டாக்ஸி’யை (ஜென்டர் டாக்ஸி) அறிமுகம் செய்ய உள்ளது. டாக்ஸியின் உரிமை யாளர், அதை இயக்கும் ஓட்டுநர்கள் எல்லாம் திருநங்கைகள்.

திருநங்கைகளுக்கு எதிரான எண் ணத்தை மாற்ற, நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கைகளுக்கான கொள்கையை அறிமுகப்படுத்தி யது கேரள அரசு. இப்போது ஜி டாக்ஸி மூலம் திருநங்கைகள் கவுரவ மான வாழ்க்கை வாழவும் வழி ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மாநில சமூக நீதித் துறை பெண் களுக்காக ஏற்கெனவே முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் ‘ஷி டாக்ஸி’யை அறிமுகப்படுத்தியது. இதற்கு பெரும் வரவேற்பு உள்ளது. அதேபோல் ‘ஜி டாக்ஸி’யும் வெற்றி பெறும். ஷி டாக்ஸியில் பெண்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால், ஜி டாக்ஸியில் பாலின வேறுபாடு இல்லாமல் ஆண், பெண், திருநங்கைகள் எல்லோரும் பயணம் செய்யலாம். இதற்கான செயல் திட் டங்கள் எல்லாம் சுமூகமாக முடி வடைந்தால், வரும் மார்ச் மாதம் ஜி டாக்ஸி சேவை தொடங்கி விடும் என்று சமூக நீதித் துறை அமைச்சர் எம்.கே.முனீர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x