Published : 11 Sep 2021 10:19 AM
Last Updated : 11 Sep 2021 10:19 AM

கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 33,376 பேருக்கு தொற்று உறுதி

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,376 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 33,376 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த பாதிப்பு 3,32,08,330ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவில் இருந்து 3,23,74,497 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தி்ல் 32,198பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,91,516 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 308 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,42,317 என்றளவில் உள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை 73,05,89,688 ஆக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை65,27,175

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x