Published : 10 Sep 2021 10:44 AM
Last Updated : 10 Sep 2021 10:44 AM

‘‘மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நாளில் மகிழ்ச்சி- அமைதி’’- பிரதமர் மோடி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:

‘‘நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் விநாயகர் அருள் அனைவருக்கும் கிடைத்து அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, அதிர்ஷ்டம், ஆரோக்கியம், ஆகியவை கிடைக்க வாழ்த்துகிறேன். கணபதி பாப்பா மோரியா’
என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x