Published : 08 Sep 2021 03:15 AM
Last Updated : 08 Sep 2021 03:15 AM

காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்தோர் சொத்து பற்றி புகார் அளிக்க இணையதளம் தொடக்கம்

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீரில் 1990-களில் தீவிரவாதம் தலைதூக்கியதைத் தொடர்ந்து அங்கிருந்த ஏராளமான குடும்பங்கள் உயிருக்கு பயந்து சொத்துக்களை காஷ்மீரிலேயே விட்டுவிட்டும் மிகக் குறைந்த விலைக்கு விற்றும் வெளிமாநிலங்களுக்கு குடி பெயர்ந்தனர்.

இவ்வாறு வெளியேறியவர்கள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள தங்கள் சொத்துக்கள் அவசரமாக குறைந்த விலைக்கு விற்கப்பட்டது மற்றும் ஆக்கிரமிப்பு மற்ற பிரச்சினைகள் பற்றி புகார் செய்ய http://jkmigrantrelief.nic.in என்ற புதிய இணையதளத்தை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று தொடங்கி வைத்தார்.

காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்தோர் தங்கள் சொத்துக்கள் மீது இந்த இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம். அந்தப் புகார்கள் ஆய்வு செய்யப்பட்டோ அல்லது சொத்துக்கள் இருக்கும் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று சரிபார்த்தோ 15 நாட்களுக்குள் டிவிஷனல் கமிஷனிரிடம் அறிக்கை அளிக்கப்படும். அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசிடம் அதிகாரபூர்வமாக 44,167 குடும்பங்கள் காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களாக பதிவு செய்துள்ளன. அதிகாரபூர்வமாக பதிவு செய்யாத காஷ்மீரில் இருந்து வெளியேறிய குடும்பத்தினரும் தங்கள் சொத்துக்கள்மீதான புகார்களை இணையதளத் தில் பதிவு செய்யலாம். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x