Last Updated : 07 Sep, 2021 11:36 AM

 

Published : 07 Sep 2021 11:36 AM
Last Updated : 07 Sep 2021 11:36 AM

இந்தியாவில் கரோனா சிகிச்சை பெறுவோர் 4 லட்சத்துக்கும் கீழ் குறைந்தனர்: 3-வது முறையாக 1.13 கோடி பேருக்குத் தடுப்பூசி

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

'கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 31 ஆயிரத்து 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 30 லட்சத்து 58 ஆயிரத்து 843 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 92ஆயிரத்து 864 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 10 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் வீதம் 1.19 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 22 லட்சத்து 24ஆயிரத்து 937 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.48ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 290 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 41 ஆயிரத்து 42 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 53 கோடியே 31 லட்சத்து 89 ஆயிரத்து 348 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 லட்சத்து 26 ஆயிரத்து 56 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 69.90 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 1.13 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 3 முறை தடுப்பூசி செலுத்துவதில் ஒரு கோடிக்கும் அதிகமாகச் செலுத்தப்பட்டுள்ளது, கடந்த 11 நாட்களில் 3 வது முறையாக ஒருகோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x