Published : 05 Sep 2021 03:14 AM
Last Updated : 05 Sep 2021 03:14 AM

கரோனா விதிகள்: கேரள முதல்வர் கடும் எச்சரிக்கை

கேரளாவில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் நேற்று, உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

மாநிலத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு உள்ளூர் அளவிலான கண்காணிப்பு முக்கியம். வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் விதிகளை மீறி வெளியே வந்து சுற்றித் திரிந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இதற்கான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் எடுத்து அபராதத்தை விதிக்கவேண்டும். மேலும் அந்த நபரை அவர்களது செலவிலேயே தனிமை முகாமில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x