Published : 04 Sep 2021 03:13 AM
Last Updated : 04 Sep 2021 03:13 AM
ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1912-ம் ஆண்டு கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு தலைநகர் மாற்றப்பட்டது. அந்த காலத்தில் டெல்லி சட்டப்பேரவை, மத்திய சட்டப்பேரவையாக இருந்தது.
பின்னர் கடந்த 1926-ம் ஆண்டு சட்டப்பேரவை, நீதிமன்றமாக மாற்றப்பட்டது. தற்போது இந்த கட்டிடத்தில் டெல்லி சட்டப்பேரவை செயல்படுகிறது. இங்கு ரகசியசுரங்கப்பாதை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி சட்டப்பேரவை தலைவர் ராம் நிவாஸ் கோயல் கூறியதாவது:
கடந்த 1993-ம் ஆண்டு நான்எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போதே டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் இருந்து செங்கோட்டைக்கு ரகசிய சுரங்கப்பாதை இருப்பதாக செவிவழியாக கூறப்பட்டது. அன்றுமுதல் சுரங்கப் பாதையை தேடி வந்தோம். நீண்ட தேடலுக்குப் பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் ரகசிய சுரங்கப் பாதையின் நுழைவு வாயிலை கண்டுபிடித்துள்ளோம்.
இப்போதைய சட்டப்பேரவை வளாகம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீதிமன்றமாக இருந்துள்ளது. இங்கு மரண தண்டனை நிறைவேற்றும் அறைகள் உள்ளன. அவற்றை நாங்கள் திறக்கவில்லை. 75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்த அறைகளை திறக்க திட்ட மிட்டுள்ளோம். இவை சுதந்திர போராட்ட தியாகிகளின் புனித தலமாக அமையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஊடக செய்தியில், "ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுதந்திர போராட்ட வீரர்களை ரகசியமாக நீதிமன்றத்துக்கு அழைத்து வர, இங்கிருந்து செங்கோட்டை வரை ரகசிய சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சுதந்திர போராட்ட, வீரர் களை பொதுமக்கள் பார்க்க முடியாமல் செய்துள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT