Published : 03 Sep 2021 03:14 AM
Last Updated : 03 Sep 2021 03:14 AM

இமாச்சலில் 100% முதல் டோஸ் தடுப்பூசி போடும் பணியில் முக்கிய பங்காற்றிய பெண்

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் கரோனா தடுப்பூசி 100% செலுத்தப்பட்ட முதல் மாநிலமாக இமாச்சல பிரதேச மாநிலம் சாதனை செய்துள்ளது.

இதற்காக சுகாதார ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றியுள்ளனர். அதிலும் உனா மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவமனையில் கர்மோ தேவி என்ற 52 வயதான பெண் சுகாதாரப் பணியாளர் பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் கடுமையாக உழைத்துள்ளார்

கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை விடுப்பே எடுக்காமல் தொடர்ந்து அவர் பணியாற்றியுள்ளார். கடந்த ஜூலை மாதம் கர்மோ தேவிக்கு வலது கால் பாதத்தில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு 4 வாரங்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியும் 8 நாட்களில் அவர் பணிக்கு திரும்பினார். உனா மாவட்ட மருத்துவமனையில் மொத்தம் 35,182 பேருக்கு முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் கர்மோதேவி மட்டும் 21.881 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளார்.

கர்மோ தேவி கூறுகையில், ‘‘பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ம் தேதி இமாச்சல பிரதேச மாநில சுகாதாரப் பணியாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் உரையாட உள்ளார். அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x