Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM
தெலங்கானா மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதையடுத்து ராஜ்பவன் அரசுப் பள்ளிக்கு மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வருகை தந்தார். பள்ளியில் கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் ஆய்வு செய்தார். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
அப்போது ஆளுநர் தமிழிசை பேசும்போது, “மாணவர்களின் உடல் நலத்தை பேணிக் காப்பது பள்ளி நிர்வாகத்தின் கடமை. ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும். கரோனா நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்களே இலவசமாக முகக்கவசம் வழங்கலாம். சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT