Published : 04 Jun 2014 12:14 PM
Last Updated : 04 Jun 2014 12:14 PM

மக்கள் நம்பிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை: பிரதமர் மோடி உறுதி

மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் ஜனநாயக கோயிலான நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

16-வது மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "16-வது மக்களவையை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். தங்கள் வாக்குகளை வாரி வழங்கி மக்கள் பொதுப் பிரதிநிதிகளை ஆசிர்வதித்துள்ளனர்.

இந்திய தேசத்தின் சாமானிய மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x