Published : 30 Aug 2021 04:05 PM
Last Updated : 30 Aug 2021 04:05 PM

கோவிட் தடுப்பூசி; மொத்த எண்ணிக்கை 63.43 கோடியைக் கடந்தது

புதுடெல்லி

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 63.43 கோடியைக் கடந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 31,14,696 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 63,43,81,358 முகாம்களில் 68,14,305 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 34,763 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,19,23,405 ஆக உயர்ந்துள்ளது.நம்நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம், 97.51 சதவீதமாக உள்ளது.

தொடர்ந்து 64 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 42,909 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,76,324. ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.15 சதவீதம் ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 14,19,990 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 52,01,46,525 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விகிதம் தொடர்ந்து 66 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.41 சதவீதம் என்ற அளவிலும், தினசரி தொற்று உறுதி விகிதம் 3.02 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 34 நாட்களாக அன்றாடத் தொற்று உறுதி விகிதம் 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 84 நாட்களாக 5 சதவீதத்திற்கும் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x