சற்றே குறைந்த கரோனா தொற்று: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 45,083 பேருக்கு பாதிப்பு; 460 பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,083 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய தினத்தைவிட இது சற்றே குறைவு. தொற்றிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 97.53 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 45,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த பாதிப்பு 3,26,95,030 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவில் இருந்து 3,18,88,642 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தி்ல் 31,374 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,68,558 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 460 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,37,830 என்றளவில் உள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை 63.09 கோடியாக உள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கரோனா தொற்று குறையாமல் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 31,265 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். 153 பேர் தொற்றுக்கு பலியாகினர்.
