Published : 28 Aug 2021 03:12 AM
Last Updated : 28 Aug 2021 03:12 AM

வங்கதேச விமான பைலட்டுக்கு நடுவானில் மாரடைப்பு

வங்கதேசத்தின் பிமன் பங்களாதேஷ் போயிங் விமானம் ஒன்று நேற்று காலை மஸ்கட்டில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு சென்று கொண்டிருந்தது.

இந்திய வான்வெளியில் ராய்ப்பூர் அருகே விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மற்றொரு விமானி கொல்கத்தா விமான போக்கு வரத்து கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டார்.

அவர்கள் கூறிய படி அருகில் உள்ள நாக்பூரில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. நாக்பூர் மருத்துவமனையில் விமானி சேர்க்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x