Published : 28 Aug 2021 03:12 AM
Last Updated : 28 Aug 2021 03:12 AM
கரோனா தடுப்பூசி மருந்தை ரிலை
யன்ஸ் லைஃப் சயின்சஸ் (ஆர்எல்எஸ்) நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதை சோதனை ரீதியில் பரிசோதிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவிலேயே சோதனையை இந்நிறுவனம் தொடங்கும் எனத் தெரிகிறது.
கரோனா தடுப்பூசி மருந்து தொடர்பாக ஆர்எல்எஸ் நிறுவனம் அளித்த விண்ணப்பத்தை மருந்து கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி மற்றும் புதிய மருந்துகள் தொடர்பாக ஆய்வு செய்யும் உயர்நிலை குழு ஆராய்ந்து இந்நிறுவனத் தயாரிப்புக்கு நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இரண்டு கட்டமாக போடப்படும் தடுப்பூசி மருந்துக்கான பரிசோதனைகள் அடுத்த வாரத்தில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.
புரத அடிப்படையில் இந்ததடுப்பூசி மருந்து உருவாக்கப் பட்டுள்ளது. பரிசோதனைகள் வெற்றிகரமாக அமையும்பட்சத்தில் 2022 முதல் காலாண்டில் இந்நிறுவன தடுப்பூசி உபயோகத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்ட சோதனையின்போது 20 வயது முதல் 80 வயதிலானபெரியவர்களுக்கு பரிசோதிக்கப்படும். மருந்தின் பாதுகாப்பு, அது உடலில் எந்த அளவுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பது தீவிரமாக கண்காணிக்கப்படும். முதல் கட்ட சோதனை குறைந்த எண்ணிக்கையிலானோர் மத் தியில் மேற்கொள்ளப்படும். இதுவெற்றிகரமான அமைந்தால் இரண்டாவது கட்ட சோதனைக்கு அனுமதிக்கப்படும். அப்போது அதிக எண்ணிக்கையிலானோ ருக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்படும்.
இந்த தடுப்பூசி மருந்தை நிறுவனத்தின் நவி மும்பை ஆய்வகம் தயாரித்துள்ளது. தற்போது விற்பனையில் உள்ள தடுப்பூசி மருந்துகளுக்கு இணையான விலை இதற்கு நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.
ஆய்வகத்திலேயே முதல் கட்ட சோதனைகள் சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. விலங்கு களுக்கும் இது சோதித்து பார்க் கப்பட்டுவிட்டது. இப்போது மனிதர்களுக்கு சோதனை நடத்த அனுமதி பெறப்பட்டு மேற்கொள்ளப்பட உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் அங்கமான ஆர்எல்எஸ், உயிரிதொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகளை குறிப்பாக மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் முன்னுரிமை அளித்து செயல்படும் நிறுவனமாகும். கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்புக்கென இது அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.
ரிலையன்ஸ் குழும நிறுவனம் கரோனா தொற்று பரவல் தொடங்கியதிலிருந்தே இது சார்ந்த பொருள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. பரிசோதனை கருவிகள், ஆய்வக பரிசோதனை கருவிகள், தடுப்பூசி மேம்பாடு, உற்பத்தி, விநியோகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் ஆர்டி-பிசிஆர்பரிசோதனை மையத்தையும் உருவாக்கி கரோனா பரிசோதனை களையும் செயல்படுத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT