Published : 28 Aug 2021 03:12 AM
Last Updated : 28 Aug 2021 03:12 AM

சீனாவின் மொபைல் செயலி மூலம் வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக தலைமுடி விற்றது கண்டுபிடிப்பு

காக்கிநாடா

ஆந்திராவில் இருந்து மியான்மர், சீனா போன்ற வெளி நாடுகளுக்கு சட்டவிரோதமாக பொருட்கள் கடத்தப்படுவதாக அமலாக்க துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஹைதராபாத், கிழக்கு கோதாவரி, குண்டூரில் 9 இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை அமலாக்க துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது சீனாவின் மொபைல் செயலி மூலம் சில கும்பல்கள், சட்டவிரோதமாக தலைமுடியை வெளிநாடுகளுக்கு கடத்துவதும், அதன் மூலம் ஹவாலா பணம் கைமாறுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விகாஸ் எண்டர்பிரைசஸ், நரேஷ் ஹெய்ர் எக்ஸ்போர்டர்ஸ், ஹ்ரித்திக் எக்ஸிம் உட்பட 6 நிறுவனங்களில் நடந்த சோதனையில், ரூ.2.90 கோடி ரொக்கம், 12 மொபைல் போன்கள், 3 லேப் டாப்கள், ஒரு கணினி மற்றும் முக்கிய ஆவணங்களை அமலாக்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்தியாவில் வாங்கும் தலைமுடிக்கு குறைந்த விலை கணக்கு காட்டி, வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரிய வந்துள்ளது. இதில் ரூ.16 கோடி வரை ஹவாலா பணம் கைமாறி இருக்கும் என்று அமலாக்க துறை கருதுகிறது.

ஆந்திராவின் பல்வேறு இடங் களில் சேகரிக்கப்படும் தலைமுடி, சாலை வழியாக மணிப்பூர் மற்றும் மிசோரமுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து மியான்மர் வழியாக சீனாவுக்கு சட்டவிரோதமாக தலைமுடி ஏற்றுமதி செய்யப் படுகிறது என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ஆன்லைன் சூதாட் டத்தின் மூலம் அதிக அளவு பண மோசடி நடந்திருப்பதும் விசாரணையில் தெரியவந் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x