Published : 25 Aug 2021 11:42 AM
Last Updated : 25 Aug 2021 11:42 AM

மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 37,593 பேருக்கு தொற்று உறுதி

புதுடெல்லி

நாடு முழுவதும் அன்றாட கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,593 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று மேலும் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கூடுதலாக 12 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்றைய ஒரு நாள் பாதிப்பு 37,593 அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 37,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த பாதிப்பு 3,25,12,366 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவில் இருந்து 3,17,54,281 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தி்ல் 34,169 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,22,327 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 648 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,35,758 என்றளவில் உள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை 59,55,04,593 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 61,90,930 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x