Published : 25 Aug 2021 03:15 AM
Last Updated : 25 Aug 2021 03:15 AM
ஆந்திர மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து, கடந்த 16-ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் ஜூனியர் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே கிருஷ்ணா மாவட்டம், மடினேபள்ளி பகுதியில் 2 அரசுப் பள்ளிகளிகளில் படிக்கும் 9 மாணவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கும் தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முதல் அந்தப் பள்ளிகளுக்கு 2 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் வேறு யாருக்கேனும் புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் இந்த விடுமுறை நீட்டிக்கப்படும் என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT