Published : 25 Aug 2021 03:15 AM
Last Updated : 25 Aug 2021 03:15 AM

9 மாணவர்களுக்கு கரோனா தொற்று: ஆந்திராவில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை

ஆந்திர மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து, கடந்த 16-ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் ஜூனியர் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே கிருஷ்ணா மாவட்டம், மடினேபள்ளி பகுதியில் 2 அரசுப் பள்ளிகளிகளில் படிக்கும் 9 மாணவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கும் தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முதல் அந்தப் பள்ளிகளுக்கு 2 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் வேறு யாருக்கேனும் புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் இந்த விடுமுறை நீட்டிக்கப்படும் என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x