Published : 24 Aug 2021 03:13 AM
Last Updated : 24 Aug 2021 03:13 AM
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக ஆன்லைனில் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகளின்படி ஆன் லைன் வணிக நிறுவனங்கள் டெபிட், கிரெடிட் கார்டு தகவல் களைச் சேமிக்க கூடாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
அமேசான், பிளிப்கார்ட், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட அனைத்து இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் பிற ஆன்லைன் கட்டண தளங்களும் இதுவரை வாடிக்கையாளர்களின் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களை தங்களுடைய சர்வரில் சேமித்து வந்தன.
இதனால் வாடிக்கையாளர்கள் சிவிவி எண்ணை மட்டும் உள்ளிட்டு, ஓடிபி எனப்படும் ரகசிய எண்ணை உள்ளிட்டால் பரிவர்த்தனைக்குப் போதுமானதாக இருந்தது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போதும் 16 இலக்க அட்டை எண், சிவிவி, காலாவதி தேதி ஆகியஅனைத்தையும் உள்ளிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த இத்தகைய புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதனால் ஆன்லைன் பரிவர்த் தனை நடைமுறைகள் சற்றுதாமதமாகும் நிலை உண்டாகும்.
ஆனால், இது வாடிக்கையாளர் களின் வங்கிச் சேவை தகவல் களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத் தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய விதிமுறைகள் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.அதன் பிறகு அனைவரும் 16 இலக்க அட்டை எண்ணை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டி இருக்கும்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT