Published : 20 Feb 2016 09:32 AM
Last Updated : 20 Feb 2016 09:32 AM
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவோயிஸ்ட்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், விசாகப் பட்டினத்தில் உள்ள பாஜக அலு வலகத்தில் நேற்று கட்சி நிர் வாகிகளின் முக்கிய கூட்டம் நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா அனைத்து துறை களிலும் வேகமாக வளர்ந்து வரு கிறது. பிரதமர் மோடியின் தலைமையில் மக்கள் நலத் திட்டங் கள் வெற்றிகரமாக செயல்படுத் தப்பட்டு வருகின்றன. விவசாயிகள் நலனுக்கான பீமா திட்டத்தை பிரதமர் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளார்.
இத்திட்டம் வேளாண் குடிமக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். வேளாண் குடும்பத்தை சேர்ந்தவன் என்ற முறையில் இத்திட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பாஜக தெலுங்கு தேசம் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தொண்டர் கள் பணியாற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்றடை வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பு விஷயத் தில் சமரசத்துக்கு இடம் அளிக்கக் கூடாது. அதே சமயம் அமைதியை நிலைநாட்ட மாவோயிஸ்ட் களுடன் பேச்சு வார்த்தை நடத்த வும் அரசு தயார்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT