Published : 18 Feb 2016 09:46 AM
Last Updated : 18 Feb 2016 09:46 AM
இந்தியாவில் ஈர்ப்பு அலை களை பதிவு செய்வதற்கான லிகோ ஆய்வுக் கூடம் அமைக்கும் பரிந் துரைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
அண்டவெளியில் இரு கருந் துளைகள் ஒன்றையொன்று சுற்றி பிணைந்தபோது ஏற்பட்ட ஈர்ப்பு அலைகளை விஞ்ஞானி கள் கண்டுபிடித்தனர். அமெரிக்கா வில் உள்ள லிகோ (LIGO (Laser Interferometer Gravitational Wave Observatory) ஆய்வுக்கூட விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானி களும், அறிவியிலின் இந்த அதிசய தக்க நிகழ்வை கடந்த வாரம் உலகுக்கு அறிவித்தனர்.
இதையடுத்து இந்தியாவிலும் ‘லிகோ’ ஆய்வுகூடம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு நேற்று அமைச்சரவை ஒப்புதல் அளித்ததால் இந்திய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘ஈர்ப்பு அலைகள் தொடர்பான ஆய்வுக்கூடத்தை அமைப்பதன் மூலம் இந்திய விஞ்ஞானிகள் வானி யல் துறையில் உலகுக்கே தலைமை தாங்கும் வாய்ப்பு அமையும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூருடன் இணைந்து நகர் புற திட்டவளர்ச்சி மற்றும் நிர்வாக மேலாண்மை செயல்படுத்தும் உடன்பாட்டுக்கும் மத்திய அமைச் சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT