56 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி: இந்தியா புதிய மைல்கல்

56 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி: இந்தியா புதிய மைல்கல்
Updated on
1 min read

கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலின் 214-வது நாளில்: 56 கோடிக்கும் அதிகமானோருக்கு இதுவரை தடுப்பூசிகளை செலுத்தி முக்கிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 56 கோடிக்கும் அதிகமானோருக்கு (56,00,94,581) கோவிட்-19 தடுப்பூசிகளை இது வரை செலுத்தி முக்கிய மைல்கல்லை நாடு எட்டி உள்ளது.

ஜூன் 21-இல் இருந்து அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை தொடங்கியுள்ள நிலையில், இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, சுமார் 50 லட்சம் (49,48,965)) தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன

18-44 வயது பிரிவில் 27,45,272 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 5,33,586 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் இன்று பெற்றனர், 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 20,50,08,400 பேர் முதல் டோசையும், 1,66,57,465 நபர்கள் இரண்டாம் டோசையும் மூன்றாம் கட்டத் தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இது வரை பெற்றுள்ளனர்.

மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை 18 - 44 வயது பிரிவினருக்கு இது வரை செலுத்தியுள்ளன.

ஆந்திரப்பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், தில்லி, ஹரியானா, ஜார்கண்ட், கேரளா, தெலங்கானா, இமாச்சலப்பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கோவிட் தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 1,13,12,852 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 92,3241 நபர்கள் இரண்டாம் டோசையும் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 297380 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 6965 பேர் இரண்டாம் டோஸையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in