Published : 17 Aug 2021 03:14 AM
Last Updated : 17 Aug 2021 03:14 AM

இந்தியாவில் பயிற்சி பெற்று வரும் ஆப்கன் ராணுவ வீரர்கள் கலக்கம்

ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள், அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிக்க வகை செய்யும் ஒப்பந்தம் 2011-ல் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து ஆப்கன் ராணுவ வீரர்கள் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய ராணுவ அகாடமியின் (ஐஎம்ஏ) மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஹிமானி பந்த் கூறும்போது, "தற்போது டேராடூன் அகாடமியில், 80 ஆப்கன் வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆப்கனில் நிலைமை மோசமாகி வருவதால் அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்புவோமோ இல்லையோ என்ற அச்சத்தில் உள்ளனர். தங்களது குடும்பத்தினரின் நிலை குறித்தும் அவர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். அவர்களுக்கு இங்குள்ள அதிகாரிகளும் பயிற்சியாளர்களும் ஆதரவு வார்த்தைகளை கூறி வருகின்றனர்.

இந்த 80 பேரும் ஓராண்டு பயிற்சி திட்டத்தில் இணைந்தவர்கள். தற்போது அவர்கள் முதல் மற்றும் 2-வது பருவ பயிற்சியில் உள்ளனர்" என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x