Published : 17 Aug 2021 03:14 AM
Last Updated : 17 Aug 2021 03:14 AM

கரோனா நிபந்தனைகளுடன் ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு

ஆந்திர மாநிலத்தில் நேற்று முதல் அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள நகராட்சி, மாநகராட்சி, ஜில்லா பரிஷத் பள்ளிகள் என அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்பட்டன.

மொத்தம் உள்ள 61,137 அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் கரோனா நிபந்தனைகளை பின்பற்றியவாறு நேற்று முதல் தொடங்கப்பட்டன. கரோனா 2-ம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம்20-ம் தேதி மூடப்பட்ட பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதேபோல் முதல் மற்றும் 2-ம் ஆண்டுக்கான அனைத்து அரசு மற்றும் தனியார் இன்டர்மீடியட் ஜூனியர் கல்லூரிகளும் திறக்கப் பட்டன.

மாணவ, மாணவிகள் முகக் கவசம் அணிய வேண்டும். மாண வர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என கருவி மூலம் கண்டறிப்பட்ட பின்னரே கைகளில் கிருமி நாசினி தெளித்து உள்ளே அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு அறை யிலும் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆசிரியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டி ருக்க வேண்டும் என ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்டதால், கிழக்கு கோதாவரி மாவட்டம், பி. கன்னவரம் அரசு பள்ளியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x