இந்தியாவில் தொடர்ந்து குறைந்துவரும் கரோனா தொற்று: உயிரிழப்பு மட்டும் குறையவில்லை
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது.கடந்த 24 மணிநேரத்தில் 36 ஆயிரம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 36 ஆயிரத்து 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 21 லட்சத்து 92 ஆயிரத்து 576ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 85 ஆயிரத்து 336 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,337 குறைந்துள்ளது. தொடர்ந்து 49 நாட்களாக கரோனா தொற்று 50 ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது.
கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 13 லட்சத்து 76ஆயிரத்து 15 பேர் குணமடைந்தனர், குணமடைந்தோர் சதவீதம் 97.46 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 493 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 31 ஆயிரத்து 225ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 179 பேரும், கேரளாவில் 109 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் இதுவரை 49 கோடியே 36 லட்சத்து 24 ஆயிரத்து 440 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. சனிக்கிழமை மட்டும் 19 லட்சத்து 23ஆயிரத்து 863 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 54.38 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
