Last Updated : 08 Aug, 2021 11:25 AM

 

Published : 08 Aug 2021 11:25 AM
Last Updated : 08 Aug 2021 11:25 AM

இந்தியாவில் ஒரே நாளில் 44 ஆயிரம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்: 39 ஆயிரம் பேருக்கு தொற்று

படம் | ஏஎன்ஐ

புதுடெல்லி


இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து 43 ஆயிரத்து 910 பேர் வீடுதிரும்பினர். புதிதாக39ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 39 ஆயிரத்து 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 19 லட்சத்து 34ஆயிரத்து 455ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 6 ஆயிரத்து 822 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரில் எண்ணிக்கையில் 43ஆயிரத்து 910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனாவில் இருந்து இதுவரை 3 கோடியே 10 லட்சத்து 99ஆயிரத்து 771 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 491 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 27ஆயிரத்து 862ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 48 கோடி பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 50 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரத்து 492 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 55லட்சத்து 91 ஆயிரத்து 657 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x