Published : 08 Aug 2021 03:16 AM
Last Updated : 08 Aug 2021 03:16 AM
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் போட்டித் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தவர் புளூடூத் ஹெட்போன் வெடித்ததில் உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாவட்டம் உதய்புரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் குமார் நாகர் (28). போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்த இவர், தனது வீட்டிலிருந்தபடி புளூடூத் ஹெட்போனை காதில் வைத்தபடி படித்துள்ளார்.
அப்போது அந்த சாதனம் சார்ஜ் போடப்பட்டிருந்த நிலையில் காதில் இருந்த புளூடூத் திடீரென வெடித்துள்ளது. இதில் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்த அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய காதுகள் படுகாயமடைந்திருந்தன. இதனிடையே, அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT