Published : 05 Aug 2021 01:43 PM
Last Updated : 05 Aug 2021 01:43 PM

கரீப் கல்யாண் யோஜனா திட்ட நாள்: உ.பி. பயனாளிகளுடன் பிரதமர் மோடி  கலந்துரையாடல்

புதுடெல்லி

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் பயனாளிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் வாயிலாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த, ஏறத்தாழ 15 கோடி பயனாளிகள் இலவச ரேஷன் பொருட்களைப் பெற்று வருகின்றனர். இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு, சுமார் 80,000 நியாய விலைக்கடைகள் மூலம் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஆகஸ்ட் 5-ந் தேதியை பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்ட நாளாக, உத்தரப்பிரதேச மாநிலம் கொண்டாடுகிறது. இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறாமல் ஒரு பயனாளி கூட விடுபட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் பயனாளிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தநாத்தும் கலந்து கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x