Published : 05 Aug 2021 03:16 AM
Last Updated : 05 Aug 2021 03:16 AM

ஆயுள் கைதிகள் முன் கூட்டி விடுதலை?- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விளக்கம்

புதுடெல்லி

பல்வேறு மாநிலங்களில் ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகின்றனர். இந்நிலையில் இவ்வாறு முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான அதிகாரம் தொடர்பாக மாறுபட்ட விளக்கத்தை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் அளித்துள்ளது.

இது தொடர்பாக நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமர்வு அளித்துள்ள விளக்கத்தில், “ஆயுள் தண்டனை கைதிகளை 14 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை செய்ய, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. என்றாலும் அரசியலமைப்பு சட்டம் 161-பிரிவின் கீழ் ஆளுநர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி 14 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை செய்யலாம். ஆனாலும் முதல்வர் தலைமையிலான மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் மட்டுமே விடுதலை செய்யலாம்” என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி, ஆயுள் தண்டனை கைதி ஒருவருக்கு மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க விரும்பினால் 14 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432-வது பிரிவின் கீழ் அவரை விடுதலை செய்யலாம். ஆனால் 14 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை செய்ய விரும்பினால் ஆளுநருக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தி, அவரை விடுதலை செய்யலாம்’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x