Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM
பெகாசஸ் உளவு மென்பொருள் பிரச்சினை குறித்து விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்ய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடவேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை (ஆகஸ்ட் 3) டெல்லியிலுள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இந்தக் கூட்டத்தை நடத்துவதற்காக ராகுல் காந்தி ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பாஜகவைத் தவிர்த்து அனைத்துக் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்துக்கு வருமாறு திரிணமூல் காங்கிரஸ் தலைமைக்கும் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் ராகுல் காந்தி நடத்தும் கூட்டங்களுக்கு வருவதை திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT