Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM
பிராக்டர் அண்ட் கேம்பிள் (பி அண்ட்ஜி) நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரியாக (சிஓஓ) சைலேஷ்ஜெஜுரிகர் (54) நியமிக்கப்பட்டுள் ளார். இதனால் இந்தப் பதவியைப் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமை கிடைத்துள்ளது.
மும்பையில் பிறந்த இவர், ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் படித்தார். ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ தொழில் மேலாண்மை பட்டம் பெற்றார். அதன்பின்னர் 1989 ஜூலை 1-ல் பி அண்ட் ஜி நிறுவனத்தில் உதவி பிராண்ட் மேலாளராக இணைந்தார். தொடர்ந்து பல்வேறு பதவி வகித்த அவர், தற்போது தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.
இவர் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பம், குளோபல் பிசினஸ் சர்வீசஸ், விற்பனை, சந்தை நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை கவனித்துக் கொள்வார் என பி அண்ட் ஜி தெரிவித்துள்ளது.
இவருடன் பள்ளியில் படித்த சத்ய நாதெள்ளா மைக்ரோசாப்ட் சிஇஓ-வாக உள்ளார். மேலும் இவரது மூத்த சகோதரர் ராஜேஷ் ஜெஜுரிகர் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT