Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM

இந்திய கடற்படை துணைத் தளபதியாக எஸ்.என். கோர்மேட் பொறுப்பேற்பு

புதுடெல்லி

இந்திய கடற்படையில் 1984-ல் இணைந்த வைஸ் அட்மிரல் எஸ்.என்.கோர்மேட், கடற்படையின் பல்வேறு போர்க் கப்பல்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா, நீர்மூழ்கி மீட்புக் கப்பல் ஐஎன்எஸ் நிரீக்ஷக், கண்ணிவெடிகளை கண்டறியும் ஐஎன்எஸ் ஆலப்புழா ஆகிய கப்பல்களில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.

இந்நிலையில் கடற்படை துணைத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து டெல்லி சவுத் பிளாக்கிலுள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற எளிமையான விழாவில் துணைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் வைஸ் அட்மிரல் ஜி.அசோக் குமாரிடமிருந்து பொறுப்புகளை எஸ்.என். கோர்மேட் பெற்றுக் கொண்டார்.

கடற்படையில் சிறந்த பணியாற்றியதற்காக எஸ்.என். கோர்மேட்டுக்கு 2007-ம் ஆண்டு நவ்சேனா பதக்கமும், 2017-ம் ஆண்டு அதி விசிஷ்த் சேவா பதக்கமும் (ஏவிஎஸ்எம்) வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x