Last Updated : 01 Feb, 2016 05:51 PM

 

Published : 01 Feb 2016 05:51 PM
Last Updated : 01 Feb 2016 05:51 PM

ஜார்கண்ட்: பலாத்கார பாதிப்பில் சிகிச்சை பெற்ற சிறுமி மீண்டும் சிதைக்கப்பட்ட கொடூரம்

ஜாம்ஷெட்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலியல் பலாத்காரத்தினால் பாதிப்படைந்த 15 வயது சிறுமி மருத்துவமனையின் பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது பரபரப்பாகியுள்ளது.

ஏற்கெனவே பாலியல் பலாத்காரக் கொடுமைக்கு ஆட்பட்டு மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுமியை ஷாம்பூ மாத்தோ என்ற செக்யூரிட்டி கார்டு ஞாயிறு இரவன்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

அந்த செக்யூரிட்டி மருத்துவமனையிலிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளார், இவருக்கு உதவியது மருத்துவமனையின் பெண் ஊழியர் ஒருவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மாத்தோவை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x