

காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டிருந்தால் நரேந்திர மோடி கூட தோல்வியடைந்திருப்பார் என்று காங்கிரஸ் கட்சியின் செயலர் சஞ்சய் நிருபம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாங்கள் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறோம். பல காரணங்களினால் பொதுமக்களுக்கு எங்கள் மீது கடும் கோபம் இருந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி மீது பொது மக்களுக்கு தீவிர எதிர்ப்பு இருந்துள்ளது, அதாவது நரேந்திர மோடியே கூட காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டிருந்தால் படுதோல்வி அடைந்திருப்பார் என்ற அளவுக்கு மக்களுக்கு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான உணர்வு இருந்துள்ளது.
இந்தத் தேர்தல் வித்தியாசமானது. கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆசி எடுத்த சிலமுடிவுகள் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விலைவாசி உயர்வு, ஊழல், இதனை பாஜக அளவுக்கு மீறி ஊதிப்பெருக்கியது. ஆனால் ஒவ்வொரு தேர்தலும் ஒரு பாடம்.
ஆனால் இது நிரந்தரப் போக்காக இருக்காது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேற்தல் முடிவுகளை ஒத்திருக்காது என்று நான் கருதுகிறேன்”
என்றார்.