Published : 31 Jul 2021 03:12 AM
Last Updated : 31 Jul 2021 03:12 AM

சிறு வணிகர், விவசாயிகளுக்கு உதவ ரூ.5,650 கோடியில் திட்டம்: கேரள மாநில அரசு அறிவிப்பு

கேரளாவில் சிறு வணிகர்கள், விவசாயிகளுக்கு உதவ ரூ.5,650 கோடி நிதி உதவித் திட்டத்தை வகுத்துள்ளதாக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் தெரிவித்தார்.

இத்திட்டத்தின்படி சிறு வணிகர்கள் மற்றும் விவசாயி களுக்கு வட்டி மானியத்தில் கடன்கள் வழங்கப்படும். அதிக பட்சம் ரூ. 2 லட்சம் வரையில் கடன் கிடைக்கும். இதற்கு முதல் ஆறு மாதங்களுக்கு 4 சதவீத வட்டி வசூலிக்கப்படும்.

இது தவிர கடன் தள்ளுபடி, குறைந்த வட்டி சலுகையில் கடன் உள்ளிட்ட திட்டங்களையும் மாநில அரசு அறிவித்துள்ளது. அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் கடைகள் வைத்துள்ள சிறு, குறு வர்த்தகர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கு வாடகை தள்ளுபடி செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல சிறு, குறு, நுண் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கட்டிட வரி விலக்கு ஜூலை முதல் டிசம்பர் 31 வரை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறு, குறு, நடுத்தர வர்த்தகர்கள் வங்கிகளில் கடன் பெறலாம். வட்டி மானியத்தை மாநில அரசு அளிக்கும் என வங்கிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x