Published : 29 Jul 2021 12:01 PM
Last Updated : 29 Jul 2021 12:01 PM

தினசரி கரோனா தொற்று 43,509 ; சிகிச்சையில் உள்ளோர்  4,03,840

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 43,509 ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,03,840 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,15,28,114

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 43,509

இதுவரை குணமடைந்தோர்:3,07,01,612

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 38,465

குணமடைந்தவர்களின் விகிதம் 97.38 சதவீதமாகும்.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 634

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 4,03,840

கரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.38%

இதுவரை 45.07 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் 1.28 சதவீதமாகும்.

வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.38 சதவீதமாக உள்ளது.

தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 5 சதவீதத்திற்கும் குறைவாக 2.52 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 46.26 கோடியாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x