Published : 26 Jul 2021 06:17 PM
Last Updated : 26 Jul 2021 06:17 PM

கோவிட் தடுப்பூசி எண்ணிக்கை: 43.51 கோடியைக் கடந்தது

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 43.51 கோடியைக் கடந்து மைல்கல் சாதனையைப் படைத்தது.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 43,51,96,001 முகாம்களில் 52,95,458 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 18,99,874 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,05,79,106 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,968 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் சதவீதம் 97.35 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 39,361 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து 29 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,11,189 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.31 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 11,54,444 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 45,74,44,011 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x