Last Updated : 25 Jul, 2021 11:15 AM

 

Published : 25 Jul 2021 11:15 AM
Last Updated : 25 Jul 2021 11:15 AM

ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்: புதிதாக 39 ஆயிரம் பேருக்கு தொற்று


இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 39ஆயிரத்து 972 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 39 ஆயிரத்து 742 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 13 லட்சத்து 71 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 8 ஆயிரத்து 212 ஆக குறைந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 765 பேர் கூடுதலாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனாவில் இருந்து குணமடைந்து இதுவரை 3 கோடியே 5 லட்சத்து 43 ஆயிரத்து 38 பேர் வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.36 ஆகக் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 535 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 20ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நாட்டில் 43.31 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x