Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM
மக்களவையில் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கூறியதாவது:
கரோனா பரவலுக்கு எதிராக ஒருங்கிணைந்து போரிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இதுவரை 20 முறை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அவர்களின் பரிந்துரைக்கேற்ப அவ்வப்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தடுப்பூசி சப்ளைக்காக பைசர் நிறுவனத்துடன் மத்திய நிபுணர் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற பிற உற்பத்தியாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம். தடுப்பூசி திட்டத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க வேண்டாம். இவ்வாறு அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
இதற்கிடையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 35,342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த சில நாட்களில் இருந்த எண்ணிக்கையை விட குறைவு. மேலும், உயிரிழப்பும் கடந்த 24 மணி நேரத்தில் 483 ஆக குறைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT