Published : 23 Jul 2021 10:29 PM
Last Updated : 23 Jul 2021 10:29 PM

கோவாக்சின்; 2 பிரேசில் நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தம் ரத்து: பாரத் பயோடெக் அறிவிப்பு

கோவாக்சின் கரோனா தடுப்பூசி சப்ளை செய்வதற்காக பிரேசில் நாட்டின் 2 நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தத்தை பாரத் பயோடெக் நிறுவனம் ரத்து செய்துள்ளது.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கரோனா தடுப்பூசிக்கு பிரேசில் அனுமதி வழங்கியது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியான கோவாக்சின் முதற்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் பிரேசில் நாட்டின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் நிறுவனம் மூலம் அந்நாட்டுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால், ஃபைஸர் தடுப்பு மருந்துடன் ஒப்பிடுகையில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் விலை அதிகமாக இருப்பதாகவும் லட்சக்கணக்கானோர் பிரேசிலில் கரோனாவால் உயிரிழந்த நிலையில் தடுப்பூசி விவகாரத்தில் அதிபர் ஊழல் செய்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின.

இது தொடர்பாக பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சகோதரர்களுமான லூயிஸ் ரிகார்டோ மிராண்டாவும், லூயிஸ் மிராண்டாவும், அதிக விலை கொடுத்து பாரத் பயோடெக்கின் கோவாக்சினை கொள்முதல் செய்ய என்ன அவசியம் என்று கேள்வி எழுப்பினர்.

பிரேசில் அதிபர் ஜேர் போல்சொனோரோ பிரேசில் நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. பிரேசிலின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் என்ற நிறுவனம் கோவாக்சின் ஒப்பந்தம் மூலம் பெரும் லாபம் ஈட்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

ஆனால் பாரத் பயோடெக் நிறுவனம் இதனை திட்டவட்டமாக மறுத்தது. ‘‘பிரேசில் நாட்டுக்கு கோவாக்சின் விநியோகித்ததில் எவ்விதமான ஊழலும் நடக்கவில்லை. அத்தகைய புகார்களை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். மேடிசன் பயோடெக் நிறுவனம் எங்களின் சர்வதேச வர்த்தகத்தைக் கவனிக்கிறது’’ என்று தெரிவித்து இருந்தது.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் கோவாக்சின் தடுப்பூசி ஒப்பந்தம் பெரும் சர்ச்சையைானதையடுத்து அதனை ரத்து செய்தது.

இந்தநிலையில் கோவாக்சின் கரோனா தடுப்பூசி சப்ளை செய்வதற்காக பிரேசில் நாட்டின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்ஸியா பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தத்தை பாரத் பயோடெக் நிறுவனம் ரத்து செய்துள்ளது.

அதேசமயம் பிரேசில் நாட்டுக்கு நேரடியாக கோவாக்சின் தடுப்பூசியை சப்ளை செய்ய தயாராக இருப்பதாகவும், பிரேசில் அரசுடன் இணைந்து செயல்பட தடை ஏதுமில்லை எனவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x