Published : 20 Jul 2021 06:02 PM
Last Updated : 20 Jul 2021 06:02 PM

‘‘தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை’’- மன்சுக் மாண்டவியா பேச்சு

தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை, ஆனால் பெரும்பாலான மாநிலங்கள் 10 முதல் 15 லட்சம் டோஸ்கள் தடுப்பூசியை வைத்துள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 42.15 கோடிக்கும் அதிகமான (42,15,43,730) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 71,40,000 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 40,03,50,489 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

2.11 கோடிக்கும் அதிகமான (2,11,93,241) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனினும் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருப்பதாக தொடர்ந்து பல மாநில அரசுகள் புகார் கூறி வருகின்றன. இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதிலளித்தார். அவர் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று சூழலில் அனைத்து தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றே விரும்பும்கிறோம். குறிப்பாக மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து மத்திய அரசு செயலாற்றி வருகிறது. எனவே தடுப்பூசி விவகாரத்தில் எந்த ஒரு மாநில அரசின் மீது நாங்கள் குற்றம் சொல்வில்லை.

எந்த ஒரு மாநில அரசும் சரியாக செயல்படவில்லை அல்லது தோல்வியடைந்து விட்டது என்று மத்திய அரசு கூறவில்லை. தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால் பெரும்பாலான மாநிலங்கள் 10 முதல் 15 லட்சம் டோஸ்கள் தடுப்பூசியை தங்களிடம் வைத்துள்ளன. என்னிடம் புள்ளி விவரங்கள் உள்ளன’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x